Friday, June 17, 2005

அடுத்தவராய் நான்



என் கவிதை
நான் மறந்து
ரசிக்க வேண்டும்
பிறருடையதாய்.

நான் சமைத்த
ரசத்தையும், பொறியலையும்
அடுத்தவராய்
நானே ருசிக்க வேண்டும்.

எனைக் காணா இன்னொருவன்
வரைய வேண்டும்
என் படத்தை .

கேட்கவேண்டும்
எனது எண்ணம்
அடுத்தவர் வாய்ச் சொல்லாக.

4 Comments:

At 7/20/2005 08:47:00 AM, Blogger முகமூடி said...

சூப்பர்..... தல சூப்பர்.... நல்ல பதிவு.... ஜமாய்ச்சுட்டீங்க....

இந்த பின்னூட்டத்தின் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.. அது இங்கே இதில் அதிக பின்னூட்டம் இடுபவர்களுக்கு காயகல்பம், கங்கை தண்ணீர், கஸ்மாலப்பொடி, கருவாடு ஆகியவை சாஷேக்களில் அடைக்கப்பட்டு இ-மெயில் அட்டாச்மெண்டில் அனுப்பி வைக்கப்படும்...

இது ஒரு ஜாலி முயற்சி அவ்வளவே... உங்கள் பதிவை திசை திருப்பும் எண்ணம் இல்லை... தயவு செய்து இந்த ஒரு முறை கண்டுக்காதீங்க...

 
At 2/10/2006 05:14:00 AM, Blogger நாமக்கல் சிபி said...

நல்ல கவிதை.
பாராட்டுக்கள்.

 
At 5/16/2006 08:31:00 AM, Blogger அனுசுயா said...

//என் கவிதை
நான் மறந்து
ரசிக்க வேண்டும்
பிறருடையதாய்.//
நல்ல கவிதை வித்தியாசமான சிந்தனை நாம் செய்யும் அனைத்தையும் பிறர் பார்வையில் நம்மால் பார்க்க முடிந்தால் தவறுகளே நடக்காது.

 
At 5/16/2006 09:44:00 AM, Blogger Muthu said...

நன்றி அனுசுயா.

 

Post a Comment

<< Home