பொட்டலக் காகிதங்கள்
தேவையென்றால் யாகம் வளர்ப்பார்கள்இல்லையென்றால்
வெறுப்புடன் குடைபிடிப்பர்
முணுமுணுத்தது
தூறலாய்.
********
நினைத்தேன்
வாழ்க்கையைக் காதலியாய்.
அதனால்தானோ
விரட்டி விரட்டி அடிக்கிறது?
கோபமாய்
சில சமயம் செல்லமாய்.
********
யாரையும் தொடவிட்டதில்லை
எனதை அனுமதியின்றி.
ஆனால் எப்படிக் காணாமல் போனது
மனம் மட்டும் ?
********
எனவே காதலி
கடைசியில்
கவிதையாவது கிடைக்கும்.
********
asl? brb rut
மனங்கள் மட்டுமல்ல
சொற்களும் சுருங்கிவிட்டன
இண்டர்நெட்டால்.
********
பொரிகடலை கட்டும்
துண்டுத் தாளானது
கடைசியில்.
ஒரு காலத்தில்
புத்தகமாய்ப் போட இருந்தேன்.
9 Comments:
.
பொட்டலக் காகிதங்கள்
மட்டில்லா வியப்பைத் தருகின்றன!
வாழ்த்துக்கள்.
//பொரிகடலை கட்டும்
துண்டுத் தாளானது
கடைசியில்.
ஒரு காலத்தில்
புத்தகமாய்ப் போட இருந்தேன்.//
மிக அருமையான எதார்த்தமாக இருந்தது, பலரின் அனுபவமும் கூட இது இப்பொழுது பொரிகடலை கட்ட வேண்டாம், வலைப்பதிவாக போடுங்களேன்.
முத்து நல்லாயிருக்கின்றன.
ஜீவா, குழலி, சந்திரவதனா,
நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு.
Lovely.
You Know,
thanks :-).
எப்படி (கவனிக்காமல்) விட்டேன். எவ்வளவு அருமையான கவிதைகள்.
//யாரையும் தொடவிட்டதில்லை
எனதை அனுமதியின்றி.
ஆனால் எப்படிக் காணாமல் போனது
மனம் மட்டும் ?//
என்ன அருமையான ஆனால் உணமையான வரிகள்.
நன்றி வெங்கி :-).
Post a Comment
<< Home