Monday, January 19, 2004

டிக்கெட் இல்லாவிட்டால் பரவாயில்லை ....!


ஒரு முறை ஐன்ஸ்டீன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது பயணச்சீட்டை சரிபார்ப்பவர் ஐன்ஸ்டீனிடம் பயணச்சீட்டைக் கேட்டார் ...

ஐன்ஸ்டீனனுக்குத் தேடிப்பார்த்தபோதுதான் தெரிந்தது.. அவர் பயணச்சீட்டை எங்கேயோ தொலைத்துவிட்டார் என்பது. குழப்பத்துடன் திரு திரு வென்று விழித்தார்.. ஆனால் பரிசோதகர் ஐன்ஸ்டீனை அடையாளம் கண்டுகொண்டுவிட்டார்.

" அய்யா .. நீங்கள்தானே புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் .. நீங்கள் நிச்சயமாய் டிக்கெட் எடுத்திருப்பீர்கள் ...அதனால் உங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால் பரவாயில்லை .."

ஐன்ஸ்டீன் கவலையுடன் சொன்னார்.. " எனக்குப் பிரச்சனை இப்போது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதில் இல்லை... டிக்கெட்டை எங்கோ தொலைத்துவிட்டேனே.. நான் எங்கு சென்றுகொண்டிருக்கிறேன் என்று எப்படித் தெரிந்து கொள்வது ? "

0 Comments:

Post a Comment

<< Home