Wednesday, December 17, 2003

என் அறையின் மூலையில் ... !

*

என்

அறையின் மூலையில் ...


எழுதித் தீர்ந்த

பேனாக்கள்...


உழைத்துத் தேய்ந்த

செருப்புகள்....


பலர் படித்துக் கிழிந்த

புத்தகங்கள்...


பல நாள் எரிந்து தீர்ந்த

மெழுகுவர்த்திகள் ...


காய்ந்து உலர்ந்த

மலர்கள்...


கடமை முடித்த பெருமிதத்தில்

அனைத்துமே ..


அறையின் நடுவே புத்தம் புதிதாய்

நான் மட்டும்.... !

*

0 Comments:

Post a Comment

<< Home