Thursday, December 25, 2003

சொர்க்கத்திலிருந்து நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் ...



எனக்கு இ-மெயிலில் வந்த ஜோக் ...

சுப்புவும் , குப்புவும் நண்பர்கள் .. இருவருமே கிரிக்கெட் பைத்தியங்கள் . இன்று நேற்றல்ல 50 வருடங்களாக எந்த கிரிக்கெட் போட்டியையும் பார்க்காமல் தவற விட்டதில்லை ... இருவருக்கும் இப்போது வயது மிக அதிகமாகிவிட்டது .. அவர்களுக்கு இப்போதுள்ள கவலையெல்லாம் சொர்க்கத்திலும் கிரிக்கெட் இருக்குமா என்பதுதான் ..எனவே யோசித்து ஒரு முடிவுக்கு வ்ந்தார்கள் .. முதலில் யார் இறந்தாலும் சொர்க்கத்தில் கிரிக்கெட் விளையாட்டு உண்டா என்பதை மற்றவருக்குச் சொல்லிவிட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் ..

சுப்பு இந்தியா பாகிஸ்தானுடன் பெருவெற்றி பெற்ற விளையாட்டைப் பார்த்துவிட்டுத் தூங்கிக்கொண்டிருக்கும்போது மாரடைப்பு வந்து சந்தோஷமாக இறந்துபோனார் ... இது நடந்த சில சில நாட்கள் கழிந்தது ..குப்பு தூங்கிக்கொண்டிருக்கும்போது அவர் தலைமாட்டில் ஒரு குரல் ..

" .... குப்பு ..! எழுந்திரு .. நான் சுப்பு வந்திருக்கிறேன் .."

" ஆ... என்ன ஆச்சரியம் .. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை .. "

"... சரி .. நான் உனக்கு ஒரு சந்தோஷமான விஷயமும் , துயரமான விஷயமும் சொல்லப்போகிறேன் ... எதை முதலில் கேட்கப்போகிறாய் ...?"

" .. அதெல்லாம் இருக்கட்டும் ... சொர்க்கத்தில் கிரிக்கெட் உண்டா அதை முதலில் சொல் .. "

" ... சொர்க்கத்தில் கிரிக்கெட் உண்டு ... அதுதான் நான் உனக்குச் சொல்ல வந்த சந்தோஷமான விஷயம் ... "


"... சரி இப்போது அந்த சோகமான விஷயத்தையும் சொல் .... "

" ... வேறொன்றுமில்லை ... நாளைக் காலையில் சொர்க்கத்தில் நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நீதான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ..... "

0 Comments:

Post a Comment

<< Home