நேற்றுப் பயம் சாப்பிட்டேன் .....!
பள்ளியில் ஆசிரியர் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார் ..
ஒரு பையனை அழைத்து ஒரு தமிழ்ப் புத்தகம் கொடுத்து வாசிக்கச் சொன்னார் ..
பையனுக்ககோ ழ , ள , ல தகறாறு. பழம் சாப்பிட்டேன் என்பதை பயம் சாப்பிட்டேன் என்று வாசித்தான் ... கழுகு என்பதை கயிகு என்றான் .. ஆசிரியர் பலமுறை முயற்சி செய்தார் அவனைச் சரியாக உச்சரிக்கவைக்க அவரால் முடியவேயில்லை ..
கோபத்துடன் பையனுக்கு இரண்டு அடி கொடுத்து அவன் அப்பாவைக் கூட்டிவரச் சொன்னார் ... அவன் அப்பா வந்தவுடன் பிரச்சனையைச் சொல்லி நீங்கள்தான் இனிமேல் அவனுக்கு வீட்டில் உச்சரிக்கப் பழகித் தரவேண்டும் என்றார் ..
கேடுவிட்டு ஆசிரியரிடம் சாதாரணமாகச் சொன்னார் அப்பா, " .சார் ... இதுதான் பிரச்சனையா ..? பையன் மேல தப்பு இல்ல... எங்க பயக்க வயக்கமே இப்படித்தான் ... "


0 Comments:
Post a Comment
<< Home